

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியான சம்பவம் படக்குழு மற்றும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே, ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக படத்தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தது. புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.