இன்னும் கொஞ்ச நாட்கள் தான்.. விரைவில் கார்களின் விலையை உயர்த்தும் மாருதி சுசுகி

மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும். ஆல்டோ K10 விலை ரூ. 3.99 லட்சம் விலையில் துவங்குகிறது.
இன்னும் கொஞ்ச நாட்கள் தான்.. விரைவில் கார்களின் விலையை உயர்த்தும் மாருதி சுசுகி
Published on

ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், ஹூணடாய் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் வரிசையில், மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிர்வாகம் மற்றும் உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு துவங்கி மாருதி சுசுகி கார்களின் விலை உயர்கிறது. கார் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும்.

இந்திய சந்தையில் மாருதி சுசுகியின் ஆல்டோ K10 மாடல் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் விலையில் துவங்குகிறது. இத்துடன் இந்த நிறுவனத்தின் இன்விக்டோ மாடலின் விலை ரூ. 29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com