உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-06-26 14:06 IST   |   Update On 2022-06-26 14:06:00 IST
  • வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
  • 2பேர் காயமடைந்தனர்

அரியலூர் :

அரியலூர் கோ. குடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாரதி மோகன் (22), தினேஷ் (18) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கைகாட்டி பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சந்தோஷ், பாரதிமோகன், தினேஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாக கூறப்பட்டது. படுகாயமடைந்த மற்ற இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து பற்றிய தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கடலூர் காட்டுமன்னார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் வீரமணி (22) என்பவரை கைது செய்தார்.

Tags:    

Similar News