திருவாலங்காடு கோவிலில் கோபுர தரிசனம்

ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.
திருவாலங்காடு கோவிலில்  கோபுர தரிசனம்
Published on

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜ பெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாக திகழ்கிறது.

இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.

ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம்.

விழாவின் 9வது நாள் இரவு பழைய ஆருத்ரா மண்ட பத்தில் உற்சவர் நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது.

தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சகத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

இதன் பின்னர் விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது.

நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என பல வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடத்தப்படுகிறது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்று நடராஜபெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெறும்.

பின்னர் பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும், காலை 8.45 மணிக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com