என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
ஆருத்ரா தரிசனத்தில் மட்டும் களையப்படும் சந்தனகாப்பு
- பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.
- பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.
நடராஜ பெருமான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திரு உத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு.
பல்வேறு சிறப்புகளை பெற்ற மங்களநாத சாமி கோவிலில் நடராஜருக்கென தனிக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நடராஜர் ஆடும் திருக்கோலத்தில் ஒரே கல்லினால் ஆன 6 அடி உயர பச்சை மரகத சிலை உள்ளது.
ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த சிலை வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவனுக்கு உகந்த நாளான ஆருத்ரா தரிசனத்தில் திருமேனி மீது சாத்தப்பட்ட சந்தன காப்பு களையப்படுகிறது.
பின்னர் சந்தனாதி தைலம், கஸ்தூரி தைலம் ஆகியவைகளை கொண்டு சந்தனம் களைக்கப்பட்ட திருமேனியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதன் பிறகு 32 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படும்.
இரவு வரை சந்தனம் படியில்லாமல் மரகத நடராஜராக அருள்பாலிக்கிறார்.
ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காணப்படும் நடராஜர், ஆருத்ரா தரிசனத்தன்று மரகத மேனியனாய் தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு காணக் கிடைக்காத காட்சி.
ஆருத்ரா மகா அபிஷே கத்திற்கு பின் மீண்டும் சந்தன காப்பு சாத்தப்படுகிறது.
நடராஜருக்கு பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை நீரில் கரைத்து உட்கொண்டால் நோய் நீங்கும், புத்திரபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆகவே பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தன்று மணிக்கணக்கில் காத்து நின்று நோய் தீர்க்கும் சந்தனத்தை பெற்று செல்கின்றனர்.
மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற இத்தலம் அவரது திருவாசகத்தில் 38 இடங்களில் சிறப்புற புகழப்பட்டுள்ளது.
அவர் தன் முற்பிறவியில் இங்கு அவதரித்து சிவபெருமான் கட்டளைப்படி வேதாகமப் பொருளை இந்த உலகிற்கு தந்து அடுத்த பிறவியில் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் அவதரித்து இங்கு வந்து மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே என திருவாசகத்தால் பாடியிருப்பது இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பாகும்.
சிவாலயங்களில் பள்ளியறை பூஜை நடக்கும்போது பாடப்படும் திருப்பொன்னுஞ்சல் பாடல் மாணிக்கவாசகரால் இக்கோவிலில் பாடப்பட்டதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்