புதுச்சேரி
null

ரூ.2 கோடி போதைப்பொருள்? - கூரியர் குடோன்களில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2024-05-22 06:56 GMT   |   Update On 2024-05-22 07:02 GMT
  • ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
  • ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

புதுச்சேரி:

புதுவைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனாலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதுடன் மாநில எல்லைகள் மற்றும் ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

இருப்பினும் அங்கிருந்த ஊழியர்களிடம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது பார்சல் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

Similar News