என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்18 April 2017 2:58 PM GMT (Updated: 18 April 2017 2:59 PM GMT)
எகிப்தின் லச்சர் நகர் அருகே உள்ள பழங்கால கல்லறையில் இருந்து 8 மம்மிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கெய்ரோ:
எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் லக்சார். இந்த நகரின் அருகில் உள்ள பகுதிகளில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சுமார் 3 ஆயிரத்து 500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றில் இருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
அவற்றுடன் மரத்தினாலான வண்ணமிகு பெட்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் இருந்துள்ளன. இதுதவிர வெள்ளை, ஆரஞ்சு, பச்சை நிறத்திலான பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே, மேலும் பல மம்மிகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘பிரபலம் வாய்ந்த வேலி ஆப் தி கிங்ஸ் என்ற பகுதி அருகே டிரா அபுல் நகா இடுகாட்டில் இந்த கல்லறை கண்டறியப்பட்டது. இது நகர நீதிபதியாக இருந்த ஒருவருக்கு உரியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் லக்சார். இந்த நகரின் அருகில் உள்ள பகுதிகளில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சுமார் 3 ஆயிரத்து 500 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்றில் இருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
அவற்றுடன் மரத்தினாலான வண்ணமிகு பெட்டிகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடைய சிலைகளும் இருந்துள்ளன. இதுதவிர வெள்ளை, ஆரஞ்சு, பச்சை நிறத்திலான பாண்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே, மேலும் பல மம்மிகள் கண்டுபிடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி தொல்பொருள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘பிரபலம் வாய்ந்த வேலி ஆப் தி கிங்ஸ் என்ற பகுதி அருகே டிரா அபுல் நகா இடுகாட்டில் இந்த கல்லறை கண்டறியப்பட்டது. இது நகர நீதிபதியாக இருந்த ஒருவருக்கு உரியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X