என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் பெண் விமானி அமெரிக்காவில் தஞ்சம்
Byமாலை மலர்28 Dec 2016 11:29 AM GMT (Updated: 28 Dec 2016 11:29 AM GMT)
பாதுகாப்பு இல்லை என்று கூறி ஆப்கானிஸ்தான் பெண் விமானி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.
கந்தகார்:
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி (25). இவர் அமெரிக்க விமானப்படையில் 15 மாதங்கள் பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விமானப்படையில் பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைய இருப்பதாக யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் எனக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேலும் நாட்டை விட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வெளியேறி வருகின்றனர். இக்காரணங்களால் அமெரிக்காவில் தங்க முடிவு செய்து இருக்கிறேன் என்றார்.
இதுகுறித்து ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனோஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவரது இந்த முடிவு எதிர்பாராதது. பொறுப்பற்றது. மேலும் வெட்க கேடானது. அவர் 1983-ம் ஆண்டு தேர்வான போது ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி என்ற பெருமை பெற்றார்.
லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்களின் அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் திகழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார். நிலோபர் ரஹ்மானி கடந்த ஆண்டு அமெரிக்க அரசின் பெண்களுக்கான வீர தீர விருது பெற்றார். இவருக்கு தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இருந்தும் அதை பொருட்படுத்தவில்லை.
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி (25). இவர் அமெரிக்க விமானப்படையில் 15 மாதங்கள் பயிற்சி பெற்றார்.
பயிற்சி முடிந்து கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் விமானப்படையில் பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் அமெரிக்காவில் தஞ்சம் அடைய இருப்பதாக யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் எனக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மேலும் நாட்டை விட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வெளியேறி வருகின்றனர். இக்காரணங்களால் அமெரிக்காவில் தங்க முடிவு செய்து இருக்கிறேன் என்றார்.
இதுகுறித்து ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது ரத்மனோஷ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவரது இந்த முடிவு எதிர்பாராதது. பொறுப்பற்றது. மேலும் வெட்க கேடானது. அவர் 1983-ம் ஆண்டு தேர்வான போது ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி என்ற பெருமை பெற்றார்.
லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்களின் அடையாளமாகவும், நம்பிக்கையாகவும் திகழ்ந்தார் என்று தெரிவித்துள்ளார். நிலோபர் ரஹ்மானி கடந்த ஆண்டு அமெரிக்க அரசின் பெண்களுக்கான வீர தீர விருது பெற்றார். இவருக்கு தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இருந்தும் அதை பொருட்படுத்தவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X