என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு எதிராக பலூச் தேசியவாத அமைப்பினர் அமெரிக்காவில் போராட்டம்
Byமாலை மலர்24 Sep 2016 10:52 AM GMT (Updated: 24 Sep 2016 10:52 AM GMT)
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு, பலூச் தேசியவாத அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹூஸ்டன்:
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு விடுதலை கோரி பலூச் தேசியவாத அமைப்பு போராடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக பேசியதையடுத்து இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பலூச் தேசியவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய-அமெரிக்க சமுதாய உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதுதொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கடத்தல் மற்றும் கொலை, பெண்கள் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்தும் முழக்கமிட்டனர். சமீபத்தில் இந்தியாவின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு விடுதலை கோரி பலூச் தேசியவாத அமைப்பு போராடி வருகிறது. இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக பேசியதையடுத்து இவ்விவகாரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. போராட்டக்காரர்களும் தங்கள் போராட்டத்தினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு பலூச் தேசியவாத அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய-அமெரிக்க சமுதாய உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது பாகிஸ்தானில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒடுக்கப்படுவதை கண்டித்தும், பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதுதொடர்பான பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பாகிஸ்தானில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பொதுமக்களை கடத்தல் மற்றும் கொலை, பெண்கள் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை கண்டித்தும் முழக்கமிட்டனர். சமீபத்தில் இந்தியாவின் உரி பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதத்துடன் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X