என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் இல்லை - வெஸ்ட் இண்டீஸ் அறிவிப்பு
Byமாலை மலர்4 Oct 2017 7:45 AM GMT (Updated: 4 Oct 2017 7:45 AM GMT)
ஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்தில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி-20 போட்டியில் விளையாடியது.
இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் 15ம் தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது ஒரு பயிற்சி ஆட்டம் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்தில் விளையாடிய 15 பேர் கொண்ட அணியே ஜிம்பாப்வேக்கு எதிராக போட்டியிலும் கலந்து கொள்ளும் என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேற்கிந்திய அணி நிர்வாகத்தினர் கூறுகையில், “உலகளவில் சிறந்து விளங்கும் அணியுடன் இளம் தலைமுறையை சேர்ந்த வீரர்கள் ஆடியுள்ளனர். இங்கிலாந்து அணியினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வெற்றி பெற்றதை இளம் வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டது அவர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாட உதவி செய்யும். எனவே இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்களே ஜிம்பாப்வே தொடரிலும் கலந்து கொள்வார்கள். அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை”, என தெரிவித்துள்ளனர்.
இதில் டெஸ்ட் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த டி-20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இறுதியாக நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி அக்டோபர் 15ம் தேதி முதல் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது ஒரு பயிற்சி ஆட்டம் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இங்கிலாந்தில் விளையாடிய 15 பேர் கொண்ட அணியே ஜிம்பாப்வேக்கு எதிராக போட்டியிலும் கலந்து கொள்ளும் என மேற்கிந்திய தீவுகள் அணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மேற்கிந்திய அணி நிர்வாகத்தினர் கூறுகையில், “உலகளவில் சிறந்து விளங்கும் அணியுடன் இளம் தலைமுறையை சேர்ந்த வீரர்கள் ஆடியுள்ளனர். இங்கிலாந்து அணியினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி வெற்றி பெற்றதை இளம் வீரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டது அவர்களுக்கு ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாட உதவி செய்யும். எனவே இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற வீரர்களே ஜிம்பாப்வே தொடரிலும் கலந்து கொள்வார்கள். அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை”, என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X