என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விசா இருந்தும் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் ருபெல் ஹொசைன் தவிப்பு
Byமாலை மலர்19 Sep 2017 10:58 AM GMT (Updated: 19 Sep 2017 10:58 AM GMT)
விசா இருந்தும் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் தென்ஆப்பிரிக்கா செல்ல முடியாமல் வங்காள தேசம் வீரர் ருபெல் ஹொசைன் தவித்து வருகிறார்.
வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் விளையாடுகிறது.
இதற்காக வங்காள தேசம் அணி வீரர்கள் கடந்த சனிக்கிழமை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன் இடம்பிடித்துள்ளார்.
அனைத்து வீரர்களும் விமானத்தில் ஏற தயாராக இருக்கும்போது ருபெல் ஹொசைனை மட்டும் தென்ஆப்பிரிக்க குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர்.
இதனால் ருபெல் ஹொசைன் டாக்காவில் உள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டின் விதிப்படி விசா இருந்தாலும் குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதி அளித்தால் மட்டுமே விமான ஊழியர்கள் அவரை ஏற்றிச் செல்வார்கள்.
இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ருபெல் ஹொசைனுக்கு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சினையால் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 28-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பாக 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் வங்காள தேசம் விளையாடுகிறது.
இதற்காக வங்காள தேசம் அணி வீரர்கள் கடந்த சனிக்கிழமை தென்ஆப்பிரிக்கா புறப்பட்டது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன் இடம்பிடித்துள்ளார்.
அனைத்து வீரர்களும் விமானத்தில் ஏற தயாராக இருக்கும்போது ருபெல் ஹொசைனை மட்டும் தென்ஆப்பிரிக்க குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் விமான ஊழியர்கள் அவரை ஏற்ற மறுத்துவிட்டனர்.
இதனால் ருபெல் ஹொசைன் டாக்காவில் உள்ளார். தென்ஆப்பிரிக்க நாட்டின் விதிப்படி விசா இருந்தாலும் குடியேற்ற அதிகாரிகள் விமானத்தில் ஏற அனுமதி அளித்தால் மட்டுமே விமான ஊழியர்கள் அவரை ஏற்றிச் செல்வார்கள்.
இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தென்ஆப்பிரிக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் ருபெல் ஹொசைனுக்கு அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சினையால் நாளை மறுநாள் (21-ந்தேதி) தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அவர் கலந்து கொள்வது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X