என் மலர்
செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: பாகிஸ்தானிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கும் ஸ்டெயின்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் எதிர்பார்க்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், போட்டியை நடத்தும் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் அணியுடன் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.
லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதி பேட்டிக்கு முன்னேறியது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தியது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
இதனால், பாகிஸ்தான் அணிக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், நாக்அவுட் போட்டியில் தரவரிசை பெரிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெற்றி குறித்து ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள். நாக்அவுட் சுற்றுகளில் விளையாடும்போது தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. சாம்பியன்ஸ் அணி எப்படி விளையாடுமோ, அப்படி விளையாடி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இன்று இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெறும் அணியுடன் வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.
லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதன்பிறகு தென்ஆப்பிரிக்கா, இலங்கையை வீழ்த்தி அரையிறுதி பேட்டிக்கு முன்னேறியது. உச்சக்கட்டமாக நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இங்கிலாந்தை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தியது அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
இதனால், பாகிஸ்தான் அணிக்கு புகழாரம் சூட்டியுள்ள தென்ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், நாக்அவுட் போட்டியில் தரவரிசை பெரிய விஷயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெற்றி குறித்து ஸ்டெயின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பாகிஸ்தானுக்கு வாழ்த்துக்கள். நாக்அவுட் சுற்றுகளில் விளையாடும்போது தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. சாம்பியன்ஸ் அணி எப்படி விளையாடுமோ, அப்படி விளையாடி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
Next Story






