என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். டிராபியுடன் ஈடன் கார்டன் திரும்புவோம்: உறுதியளித்த ஷாருக் கான்
    X

    ஐ.பி.எல். டிராபியுடன் ஈடன் கார்டன் திரும்புவோம்: உறுதியளித்த ஷாருக் கான்

    பிளேஆஃப் சுற்றுகளில் வெற்றி பெற்று சாம்பியன் டிராபியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன் திரும்புவோம் என்று ஷாருக் கான் உறுதியளித்துள்ளார்.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா அணியின் உரிமையாளராக ஷாருக் கான் இருந்து வருகிறார். தற்போது அவர் சினிமா பட ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் பெரும்பாலான போட்டிகளை நேரில் வந்து பார்க்கவில்லை.

    கொல்கத்தாவின் கடைசி லீக் போட்டி என்பதால் நேற்று மைதானத்திற்கு வந்திருந்தார். அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    போட்டி முடிந்த பின்னர் ஷாருக்கான், கொல்கத்தா அணி கோப்பையுடன் ஈடன்கார்டன் திரும்பும் என்று ரசிகர்களுக்க உறுதியளித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில் ‘‘ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்து வந்துள்ள ஆதரவை பார்க்கையில், நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, கோப்பையுடன் ஈடன் கார்டன் வர முயற்சிப்போம்.

    நாங்கள் சில போட்டிகளில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தோம். தற்போது இது கடினமாக இருந்தாலும், தொடரில் நல்ல நிலையில்தான் உள்ளோம்.

    கோப்பையை வெல்ல நாங்கள் இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டியுள்ளது. கொல்கத்தாவில் இது எங்களுக்கு கடைசி போட்டி. சற்று அதிர்ஷ்டம் இல்லாமல் போனது.

    இந்த சீசனில் இனிமேல் ஈடன்கார்டன் வரப்போவதில்லை. ஆனால், போட்டியில் விளையாட இங்கே வராவிட்டாலும், கடவுள் கிருபையால் டிராபி கோப்பையுடன் திரும்புவோம்’’ என்றார்.
    Next Story
    ×