என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுவர்களின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த ரோகித் சர்மாவுக்கு 50 சதவிகிதம் அபராதம்
Byமாலை மலர்25 April 2017 7:34 AM GMT (Updated: 25 April 2017 7:34 AM GMT)
நடுவரின் தீர்ப்புக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி மும்பையை வீழ்த்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
களத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். கடைசி ஓவரை புனே வீரர் உனத்கண்ட் வீசினார். முதல் பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைடாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் வைடு என அறிவிக்கவில்லை.
நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் சர்மாவின் இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்த போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - புனே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி மும்பையை வீழ்த்தியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.
களத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். கடைசி ஓவரை புனே வீரர் உனத்கண்ட் வீசினார். முதல் பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உனத்கண்ட் வீசிய இரண்டாவது பந்து வைடாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் வைடு என அறிவிக்கவில்லை.
நடுவர்களின் செயலால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரோகித் சர்மாவின் இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என தெரிவித்துள்ள ஐ.பி.எல் நிர்வாகம், அந்த போட்டி சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் தொகையை அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X