என் மலர்
செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தும் திறமை டெல்லி அணியிடம் உள்ளது: மேத்யூஸ் சொல்கிறார்
தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை குவித்து முதல் இடம் வகிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வீ்ழ்த்தும் திறமை டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் உள்ளது என்று மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் அதிக வெற்றிகளை குவித்துள்ளன. குறிப்பாக மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் தோற்றபின், தொடர்ந்து ஐந்து வெற்றிகளை குவித்துள்ளது. நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 199 ரன் சேஸிங்கை 15.3 ஓவரிலேயே முடித்தது. இதனால் மற்ற அணிகள் அஞ்சுகின்றன.
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தும் திறன் தங்களிடம் உள்ளதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் 199 ரன்களை 15.3 ஓவரில் எட்டியது. ஆனால், உறுதியாக அவர்களை வெல்ல முடியும். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
நாங்கள் தோற்ற போட்டிகளில் எல்லாம் நெருங்கி வந்துதான் தோற்றோம். அடுத்த முறை இதுபோன்று சூழ்நிலை வந்தால், போட்டியை திறமையாக முடிப்போம்’’ என்றார்.
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் 2-வது போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தும் திறன் தங்களிடம் உள்ளதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில் ‘‘மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் அணிக்கெதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் 199 ரன்களை 15.3 ஓவரில் எட்டியது. ஆனால், உறுதியாக அவர்களை வெல்ல முடியும். அதற்கான திறமை எங்களிடம் உள்ளது.
நாங்கள் தோற்ற போட்டிகளில் எல்லாம் நெருங்கி வந்துதான் தோற்றோம். அடுத்த முறை இதுபோன்று சூழ்நிலை வந்தால், போட்டியை திறமையாக முடிப்போம்’’ என்றார்.
Next Story






