search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர்
    X

    பார்முலா 4 கார்பந்தய விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இங்கிலாந்தின் இளம் வீரர்

    இங்கிலாந்தில் நடைபெற்ற பார்முலா 4 கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 18 வயதே ஆன இளம் வீரர் இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    இங்கிலாந்தின் சுர்ரே பகுதியைச் சேர்ந்தவர் பில்லி மாங்கர். கடந்த வாரம் பார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்றது. டோனிங்க்டன் பார்க் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜே.எச்.ஆர். டெவ்லெப்மென்ட்ஸ் அணி சார்பாக பில்லி மாங்கர் பங்கேற்றார்.

    எதிர்பாராத விதமாக இவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவருடைய இரண்டு கால்களையும் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இதை பில்லி மாங்கரின் குடும்பம் மற்றும் அவரது கார் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது மருத்துவ செலவிற்காக சுமார் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பவுண்டு தேவைப்படும் என்ற சூழ்நிலையில், பார்முலா ஒன் சாம்பியன் லெவிஸ் ஹாமில்டன் மற்றும் ஜேன்சன் பட்டன் ஆகியோர் உதவியுடன் நிதி திரட்டப்பட்டது.

    எதிர்பார்த்ததை விட அதிக நிதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
    Next Story
    ×