search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்
    X

    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியோடு பார்சிலோனாவை வெளியேற்றியது யுவான்டஸ்

    ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் தொடரின் காலிறுதியில் இரண்டு லெக்குகள் முடிவில் பார்சிலோனாவை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது யுவான்டஸ்.
    ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதியின் 2-வது லெக் போட்டிகள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. 2-வது லெக் நேற்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் 4-0 என யுவான்டசை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை பார்சிலோனாவிற்கு இருந்தது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.எஸ்.ஜி. அணிகெதிராக இதுபோன்றுதான் 4-0 என பின்தங்கிய நிலையில் இருந்து பார்சிலோனா, தனது சொந்த மைதானத்தில் 6-1 என பி.எஸ்.ஜி-யை வீழ்த்தியது.

    இதுபோன்ற அதிசயம் நேற்றும் நடைபெறும் என பார்சிலோனா அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யுவான்டஸ் அணியின் அபாரமான ஆட்டத்தால் பார்சிலோனா அணியால் ஒரு கோல்கள் கூட அடிக்க முடியவில்லை. அதைபோல் ஒருகோலும் வாங்கவில்லை. இதனால் 2-வது லெக் ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.

    முதல் லெக்கில் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்றதால் இரண்டையும் சேர்த்து 3-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.



    மற்றொரு ஆட்டத்தில் மொனாகோ 2-வது லெக்கில் டோர்ட்மன்ட் அணியை 3-1 என வீழ்த்தியது. முதல் லெக்கில் 3-2 என மொனாகோ வெற்றி பெற்றது. மொத்தத்தில் 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.



    பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணியும், லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அட்லெடிகோ மாட்ரிட் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.



    அரையிறுதியில் எந்தெந்த அணிகள் மோதும் என்ற அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
    Next Story
    ×