என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: ஸ்டார்க், லின் சேர்ப்பு; பால்க்னெர் அவுட்
Byமாலை மலர்20 April 2017 8:17 AM GMT (Updated: 20 April 2017 8:17 AM GMT)
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி ஆல் ரவுண்டரான பல்க்னெருக்கு இடம் கிடைக்கவில்லை. ஸ்டார்க், லின் இடம்பிடித்துள்ளனர்.
மெல்போர்ன், ஏப்.20-
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.
இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.
இங்கிலாந்தில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. ஐ.சி.சி.யால் இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது என்பதால் அனைத்து அணிகளும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக அந்த அணி கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் உள்ளது.
இதற்கேற்ற வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது. இந்திய டெஸ்ட் தொடரின்போது காயத்தால் விலகிய மிட்செல் ஸ்டார்க், ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகிய கிறிஸ் லின் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னணி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பால்க்னெருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் ஷேன் மார்ஷ், கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜார்ஜ் பெய்லி போன்றோருக்கும் இடம் கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-
1. ஸ்டீவன் சுமித் (கேப்டன்), 2. வார்னர், 3. ஆரோன் பிஞ்ச், 4. மேக்ஸ்வெல், 5. மேத்யூ வடே, 6. கிறிஸ் லின், 7. ஹென்றிக்ஸ், 8. கம்மின்ஸ், 9 ஹாஸ்டிங்ஸ், 10. ஹசில்வுட், 11. டிராவிஸ் ஹெட், 12. பேட்டின்சன், 13. மிட்செல் ஸ்டார்க், 14. ஸ்டோய்னிஸ், 15. ஆடம் ஜம்பா.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X