என் மலர்
செய்திகள்

பரபரப்பான ஆட்டத்தில் மணீஷ் பாண்டே சிக்சரால் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
டெல்லியில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார் மணீஷ் பாண்டே.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் சாம்சன் 39 ரன்னும், ரிஷாப் பந்த் 38 ரன்னும் சேர்த்தனர்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக காம்பீர், கிராண்ட்ஹோம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிராண்ட்ஹோம் 1 ரன்னிலும், காம்பீர் 14 ரன்னிலும், அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே - யூசுப் பதான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது. யூசுப் பதான் 39 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
மொகமது ஷமி மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா வீசினார். முதல் பந்தை தவற விட்ட கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. சுனில் நரைன் களம் இறங்கினார்.
3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே வீசிய பந்தை, அபாரமாக லாங் மிட்ஆன் திசையில் தூக்கி அடித்தார்.

பேட் கம்மின்ஸ் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க தயாராக இருந்தார். ஆனால் பந்து அவரையும் தாண்டி சிக்சருக்கு பறந்தது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 1 பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மணீஷ் பாண்டே 49 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக காம்பீர், கிராண்ட்ஹோம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிராண்ட்ஹோம் 1 ரன்னிலும், காம்பீர் 14 ரன்னிலும், அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே - யூசுப் பதான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது. யூசுப் பதான் 39 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
மொகமது ஷமி மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா வீசினார். முதல் பந்தை தவற விட்ட கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. சுனில் நரைன் களம் இறங்கினார்.
3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே வீசிய பந்தை, அபாரமாக லாங் மிட்ஆன் திசையில் தூக்கி அடித்தார்.

பேட் கம்மின்ஸ் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க தயாராக இருந்தார். ஆனால் பந்து அவரையும் தாண்டி சிக்சருக்கு பறந்தது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 1 பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மணீஷ் பாண்டே 49 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
Next Story






