search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை மைதான கூரைக்கு மேலே பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த தோனி
    X

    பந்தை மைதான கூரைக்கு மேலே பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த தோனி

    பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான சிக்ஸர் மூலம் பந்தை மைதான கூரைக்கே பறக்கவிட்டு மகேந்திர சிங் தோனி தனது ரசிகர்களை மகிழ்வித்தார்.
    பெங்களூர்:

    ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி தோற்கடித்தது.

    இந்த தொடரில் முந்தைய ஆட்டங்களில் சொதப்பி வந்த மகேந்திர சிங் தோனி, இந்தப் போட்டியில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 14-வது ஓவரில் சாகல் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் ஒன்றை விளாசினார். தோனி விளாசிய அந்த பந்து மைதானத்தின் கூரைக்கு மேலே சிக்கிக் கொண்டது. இந்த சீசனில் விளாசப்பட்ட பெரிய சிக்ஸர் இது என்று தெரிகிறது.

    மேலும் தோனி 23 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 24 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார்.

    இந்தப் போட்டில் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு டிவில்லியர்சின் விக்கெட்டை கைப்பற்றினார். இம்ராம் தாஹிர் வீசிய அற்புதமான பந்தை வெளியே இறங்கி அடிக்க முற்பட்ட டிவில்லியர்சை தாண்டி பந்து பின்னே சென்றுவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் தோனி அதனை பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.
    Next Story
    ×