search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்தது யுவான்டஸ்
    X

    பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்தது யுவான்டஸ்

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்கள வீரரான பவுலோ டைபாலாவின் ஒப்பந்தத்தை 2022 வரை நீட்டித்து டிரான்ஸ்பர் யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது யுவான்டஸ்.
    அர்ஜென்டினாவைச் சேர்ந்த முன்கள கால்பந்து வீரரான பவுலோ டைபாலா இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 23 வயதாகும் டைபாலா சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஐரோப்பிய சாம்பியன் லீக் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை யுவுான்டஸ் 3-0 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். இந்த போட்டியில் டைபாலா இரண்டு கோல்கள் அடித்தார்.

    யுவான்டஸ் உடனான ஒப்பந்தத்தை டைபாலா நீட்டிக்காமல் இருந்தார். இதனால் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சியா அணிகள் டைபாலாவிற்கு வலை விரித்தது. அவருக்காக 100 மில்லியன் பவுண்டு டிரான்ஸ்பர் தொகையாக கொடுக்க இந்த கிளப்புகள் தயாராக இருந்தது.



    இந்நிலையில் யுவான்டஸ் அணி மேலும் ஐந்து வருடத்திற்கு, அதாவது 2022 வரை டைபாலா உடனான ஒப்பந்தத்தை யவான்டஸ் அணி நீட்டித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் டைபாலா கையெழுத்திட்டுள்ளார். இதனால் டைபாலா அணி மாறுவாரா? என்ற யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
    Next Story
    ×