என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் லீக்: காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை நைய புடைத்தது யுவான்டஸ்
Byமாலை மலர்12 April 2017 12:40 PM GMT (Updated: 12 April 2017 12:40 PM GMT)
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதி முதல் லெக்கில் பார்சிலோனாவை 3-0 என நையப் புடைத்துள்ளது யுவான்டஸ்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ், டார்ட்மண்ட், மொனாகோ, லெய்செஸ்டர் பெயர்ன் முனிச் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் சந்திக்க வேண்டும். அதன்படி முதல் காலிறுதி போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் நேற்று நள்ளிரவு யுவான்டஸிற்கு சொந்தமான மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முன்னணி அணியான பார்சிலோனாவிற்கு யுவான்டஸ் கடும் சவாலாக விளங்கியது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது யுவான்டஸ். குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான பவுலோ டைபாலா முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 7-வது நிமிடத்தில் ஒரு கோலும், 22-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். பின்னர் 55-வது நிமிடத்தில் சியேலினி மேலும் ஒரு கோல் அடிக்க யுவான்டஸ் 3-0 என அபாரமாக வெற்றி பெற்றது. பார்சிலோனா எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் 20-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோன 4-0 என வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.
16 அணிகள் கொண்ட சுற்றில் பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) முதல் லெக்கில் 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. அதன்பின் பார்சிலோனா 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் எதாவது விசித்திரமான நிகழ்வு நடந்தால் பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
காலிறுதியில் ஒவ்வொரு அணியும் எதிரணியை தங்களது சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் சந்திக்க வேண்டும். அதன்படி முதல் காலிறுதி போட்டியில் பார்சிலோனா - யுவான்டஸ் அணிகள் நேற்று நள்ளிரவு யுவான்டஸிற்கு சொந்தமான மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முன்னணி அணியான பார்சிலோனாவிற்கு யுவான்டஸ் கடும் சவாலாக விளங்கியது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியது யுவான்டஸ். குறிப்பாக அந்த அணியின் இளம் வீரரான பவுலோ டைபாலா முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார். 7-வது நிமிடத்தில் ஒரு கோலும், 22-வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தார். பின்னர் 55-வது நிமிடத்தில் சியேலினி மேலும் ஒரு கோல் அடிக்க யுவான்டஸ் 3-0 என அபாரமாக வெற்றி பெற்றது. பார்சிலோனா எவ்வளவோ முயன்றும் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் யுவான்டஸ் 3-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது லெக் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் 20-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோன 4-0 என வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும்.
16 அணிகள் கொண்ட சுற்றில் பாரிஸ் செயன்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) முதல் லெக்கில் 4-0 என பார்சிலோனாவை வீழ்த்தியது. அதன்பின் பார்சிலோனா 6-1 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் எதாவது விசித்திரமான நிகழ்வு நடந்தால் பார்சிலோனா அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X