search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா
    X

    ஐ.பி.எல்.: மும்பை வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா.
    ஐ.பி.எல். தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் காம்பீர், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது காம்பீர் 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    பாண்டே இறுதிவரை அவுட்டாகாமல் 47 பந்தில் 81 ரன்கள் எடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. பின்னர் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்து வருகிறது.
    Next Story
    ×