என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எல்.: புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
Byமாலை மலர்6 April 2017 4:26 PM GMT (Updated: 6 April 2017 4:26 PM GMT)
புனேவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்றைய ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை அணிகள் மோதுகின்றன.
புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில் ஆடம் சம்பா, இம்ரான் தாஹிர் என இரண்டு வெளிநாட்டு லெக்ஸ் பின்னர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். மும்பை அணி 4.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பார்த்தீப் பட்டேல் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (3), பட்லர் (19 பந்தில் 38 ரன்) ஆகிய விக்கெட்டையும் தாஹிர் வீழ்த்தினார்.
அதன்பின் வந்த ராணா (34), பொல்லார்டு (27) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க மும்பை அணியின் ஸ்கோர் 150 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை சவுத்தி சிக்சருக்கு தூக்கினார். கடைசி ஓவரை திண்டா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் ஹர்திக் பாண்டியா. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அவர், 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை அணி கடைசி ஓவரில் 30 ரன்கள் திரட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதனால் புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே களம் இறங்கி விளையாடி வருகிறது.
புனே அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். புனே அணியில் ஆடம் சம்பா, இம்ரான் தாஹிர் என இரண்டு வெளிநாட்டு லெக்ஸ் பின்னர்கள் சேர்க்கப்பட்டனர். இதனால் டு பிளிசிஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மும்பை அணியின் பார்த்தீவ் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார்கள். மும்பை அணி 4.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. பார்த்தீப் பட்டேல் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அடுத்து வந்த ரோகித் சர்மா (3), பட்லர் (19 பந்தில் 38 ரன்) ஆகிய விக்கெட்டையும் தாஹிர் வீழ்த்தினார்.
அதன்பின் வந்த ராணா (34), பொல்லார்டு (27) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க மும்பை அணியின் ஸ்கோர் 150 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 19-வது ஓவரின் கடைசி பந்தை சவுத்தி சிக்சருக்கு தூக்கினார். கடைசி ஓவரை திண்டா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார் ஹர்திக் பாண்டியா. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டிய அவர், 5-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். இதனால் மும்பை அணி கடைசி ஓவரில் 30 ரன்கள் திரட்ட மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. இதனால் புனே அணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே களம் இறங்கி விளையாடி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X