search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக இசாந்த் சர்மா சேர்ப்பு
    X

    பஞ்சாப் அணியில் முரளி விஜய்க்குப் பதிலாக இசாந்த் சர்மா சேர்ப்பு

    கி்ங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்க்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.


    ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. இதில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் முரளி விஜய், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்தார். இவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

    இதனால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக பேட்ஸ்மேன் ஒருவர்தான் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வேகப்பந்து வீச்சாளர் இசாந்த் சர்மா, முரளி விஜய்க்குப் பதிலாக பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×