என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொல்லார்டு, சிம்மன்ஸ் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்
Byமாலை மலர்1 April 2017 12:43 PM GMT (Updated: 1 April 2017 12:43 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர்களான பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் ஏப்ரல் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைகிறார்கள்.
ஐ.பி.எல். சீசன்- 10 கிரிக்கெட் திருவிழா வரும் 5-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தங்களுடைய வீரர்களை ஒருங்கிணைத்து பயிற்சியை தொடங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கீரன் பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த தொடரின் கடைசி போட்டி நாளை (ஏப்ரல் 2-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டி முடிந்த கையோடு அவர்கள் இந்தியா புறப்படுகிறார்கள்.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘பொல்லார்டு மற்றும் சிம்மன்ஸ் ஏப்ரல் 4-ந்தேதி மும்பை வந்தடைவார்கள். அதன்பின் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்கள்.
2015-ம் ஆண்டு மும்பை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக இருந்தார்கள். பொல்லார்டு 16 போட்டியில் 419 ரன்னும், சிம்மன்ஸ் 540 ரன்னும் குவித்தார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடக்க போட்டியில் மலிங்கா மற்றும் அசேலா குணரத்னேவை இழக்கிறது. ஏனென்றால், அதே நேரத்தில் இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடக்கிறது. அதன்பின் 7-ந்தேதி அவர்கள் மும்பை அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் புனே அணியை 6-ந்தேதி சந்திக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்த கீரன் பொல்லார்டு, லென்டில் சிம்மன்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். தற்போது பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இருவரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த தொடரின் கடைசி போட்டி நாளை (ஏப்ரல் 2-ந்தேதி) நடக்கிறது. இந்த போட்டி முடிந்த கையோடு அவர்கள் இந்தியா புறப்படுகிறார்கள்.
இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘பொல்லார்டு மற்றும் சிம்மன்ஸ் ஏப்ரல் 4-ந்தேதி மும்பை வந்தடைவார்கள். அதன்பின் 5-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்’’ என்று தெரிவித்தார்கள்.
2015-ம் ஆண்டு மும்பை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் முக்கிய காரணமாக இருந்தார்கள். பொல்லார்டு 16 போட்டியில் 419 ரன்னும், சிம்மன்ஸ் 540 ரன்னும் குவித்தார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடக்க போட்டியில் மலிங்கா மற்றும் அசேலா குணரத்னேவை இழக்கிறது. ஏனென்றால், அதே நேரத்தில் இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடக்கிறது. அதன்பின் 7-ந்தேதி அவர்கள் மும்பை அணியுடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் புனே அணியை 6-ந்தேதி சந்திக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X