search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதிப்பை நிரூபிக்கும் ஆவலில் ரஷித்கான்
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதிப்பை நிரூபிக்கும் ஆவலில் ரஷித்கான்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்படி ஆடுகிறேனோ அதே போன்று ஐதராபாத் அணிக்காவும் விளையாட விரும்புகிறேன் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
    ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஐ.பி.எல். ஏலத்தின் போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரூ.4 கோடிக்கு ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

    18 வயதான ரஷித்கான் கூறுகையில், ‘ ‘ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள சக வீரர்கள் என்னை ‘மில்லியன் டாலர் பேபி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு என்னை சொல்லும் போதெல்லாம் சிரிப்பு தான் வரும். நான் ‘மில்லியன் டாலர் பேபி’ என்பதை களத்தில் நிரூபிக்க ஆர்வமாக இருக்கிறேன். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனதால் எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை.



    களம் இறங்கினால் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும். தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்காக எப்படி ஆடுகிறேனோ அதே போன்று ஐதராபாத் அணிக்காவும் விளையாட விரும்புகிறேன். ஐதராபாத் அணி இந்த சீசனிலும் மகுடம் சூடுவதை பார்க்க ஆசைப்படுகிறேன்.

    யுவராஜ்சிங், வார்னர், வில்லியம்சன், ஷிகர் தவான் போன்ற பெரிய வீரர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள எனக்கு இது அருமையான வாய்ப்பாகும். சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரனின் (ஐதராபாத் அணி ஆலோசகர்) அறிவுரைகளை பெற்று செயல்படவும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார்.
    Next Story
    ×