search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேட்ச் சர்ச்சை விவகாரம்: முரளி விஜய்யை மோசமான வார்த்தையால் திட்டிய சுமித்
    X

    கேட்ச் சர்ச்சை விவகாரம்: முரளி விஜய்யை மோசமான வார்த்தையால் திட்டிய சுமித்

    தரமசாலா டெஸ்டில் இந்திய வீரர் முரளி விஜய்யை ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் மோசமான வார்த்தைகளால் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தரமசாலா:

    அஸ்வின் ஓவரில் ஹாசல்வுட் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற முரளிவிஜய் ‘கேட்ச்.’ செய்தார். அப்போது பந்து தரையில் பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரிடம் நாடப்பட்டது.

    டெலிவி‌ஷன் ரீபிளேயில் பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3-வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார்.



    முரளி விஜய் தரையில் பந்து பட்டதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டதால் வீரர்கள் அறையில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் ஆவேசம் அடைந்தார். அவர் முரளி விஜய்யை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லி மோசடி என்று கூறி திட்டினார். சுமித் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சத்தம் போட்டது கேமிராவில் பதிவாகி இருந்தது.

    சுமித்தின் இந்த செயல் மிகவும் மோசமான நிகழ்வாகும். அவரது இந்த நடத்தையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்து உள்ளது. ஆனால் சுமித் மீது அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் செய்யவில்லை.

    இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×