search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தமிழில் வர்ணனை
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தமிழில் வர்ணனை

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    சென்னை :

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சோனி டெலிவிஷன் குழுமம் பெற்றுள்ளது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும்.

    பிராந்திய ரசிகர்களையும் அதிகம் கவரும் வகையில் மண்டல மொழிகளிலும் இந்த போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது. தமிழ், பெங்கால், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. சேனல்களில் இந்த போட்டி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.



    தமிழ் வர்ணனையாளர்கள் குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹேமங் பதானி, வி.பி.சந்திரசேகர், பட்டாபிராமன், வி.சத்தியநாராயணன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த தகவலை சோனி டெலிவிஷன் குழும அதிகாரி பிரசன்னா கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
    Next Story
    ×