என் மலர்
செய்திகள்

தலாய் லாமாவை சந்தித்து ஆசி பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள்
தரம்சாலாவில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்டில் விளையாட சென்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தலாய்லாமாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்கான இரண்டு அணி வீரர்களும் அங்கு சென்றுள்னர். இதற்காக நேற்றும் இன்றும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

திபெத் புத்த மத குருவான தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவர் தரம்சாலாவில் தங்கியுள்ளார்.

அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் அவருடைய மடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தலாய் லாமா ஆசி வழங்கினார்.

அத்துடன் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய கையெழுத்து அடங்கிய டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சியை தலாய் லாமாவிடம் வழங்கினார்கள்.

திபெத் புத்த மத குருவான தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அவர் தரம்சாலாவில் தங்கியுள்ளார்.

அவரை ஆஸ்திரேலிய வீரர்கள் அவருடைய மடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தலாய் லாமா ஆசி வழங்கினார்.

அத்துடன் அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய கையெழுத்து அடங்கிய டெஸ்ட் போட்டிக்கான ஜெர்சியை தலாய் லாமாவிடம் வழங்கினார்கள்.
Next Story






