என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டியில் இருந்து குசால் பெரேரா நீக்கம்
Byமாலை மலர்23 March 2017 2:10 PM GMT (Updated: 23 March 2017 2:10 PM GMT)
வங்காள தேச அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இருந்து இலங்கை விக்கெட் கீப்பர் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (23) சனிக்கிழமை தொடங்குகிறது. நேற்று பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான குசால் பெரேரா 78 பந்தில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் தம்புல்லாவில் 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். கொழும்பில் ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கும் போட்டியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அணியின் மானேஜர் அசாங்கா குருசிங்கா கூறுகையில் ‘‘குசால் பெரேராவின் காயம் சிறிய அளவில்தான் உள்ளது. அவர் 2-வது போட்டியில் இடம்பெறுவதற்கு உடற்தகுதியை பெற்று விடுவார். இருந்தாலும், கொழும்பில் இருந்து தம்புல்லாவிற்கு அணி செல்லும்போது அவர் சக வீரர்களுடன் செல்லவில்லை. இதனால் நாளைக்குள் மாற்று வீரரை தேர்வு செய்வோம். ஏப்ரல் 1-ந்தேதி கொழும்பில் நடைபெற இருக்கும் போட்டியின்போது அணியுடன் இணைந்து கொள்வார்’’ என்றார்.
இதனால் தம்புல்லாவில் 25-ந்தேதி மற்றும் 28-ந்தேதி நடைபெறும் போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார். கொழும்பில் ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கும் போட்டியில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அணியின் மானேஜர் அசாங்கா குருசிங்கா கூறுகையில் ‘‘குசால் பெரேராவின் காயம் சிறிய அளவில்தான் உள்ளது. அவர் 2-வது போட்டியில் இடம்பெறுவதற்கு உடற்தகுதியை பெற்று விடுவார். இருந்தாலும், கொழும்பில் இருந்து தம்புல்லாவிற்கு அணி செல்லும்போது அவர் சக வீரர்களுடன் செல்லவில்லை. இதனால் நாளைக்குள் மாற்று வீரரை தேர்வு செய்வோம். ஏப்ரல் 1-ந்தேதி கொழும்பில் நடைபெற இருக்கும் போட்டியின்போது அணியுடன் இணைந்து கொள்வார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X