என் மலர்
செய்திகள்

ராஞ்சி டெஸ்ட்: இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை நேரில் வந்து பார்த்தார் டோனி
ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை மகேந்திர சிங் டோனி நேரில் வந்து கண்டு ரசித்தார். இந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஞ்சியில் கடந்த 16-ந்தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் சொந்த ஊர் ராஞ்சி. ராஞ்சி மைதானத்திற்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
தனது சொந்த ஊர் மைதானம் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளதால், முதல் நாள் ஆட்டத்தை நேரில் வந்து கண்டுகளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் அவரால் ராஞ்சி மைதானத்திற்கு வரமுடியவில்லை.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ஜார்கண்ட் அணி பெங்கால் அணியிடம் வீழ்ந்தது. இதனால் டோனி டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் இன்று மதியத்திற்குப்பின் திடீர் பயணமாக ராஞ்சி மைதானம் வந்து ஆட்டத்தை ரசித்தார்.
ஆட்டம் முடியும் வரை மைதானத்தில் இருந்து போட்டியை பார்த்தார். டோனியை டி.வி. ஸ்கிரீனில் காண்பித்தபோது உள்ளூர் ரசிகர்கள் டோனி... டோனி... என உற்சாக குரல் எழுப்பினார்கள்.
2014-ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
தனது சொந்த ஊர் மைதானம் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளதால், முதல் நாள் ஆட்டத்தை நேரில் வந்து கண்டுகளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றதால் அவரால் ராஞ்சி மைதானத்திற்கு வரமுடியவில்லை.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் ஜார்கண்ட் அணி பெங்கால் அணியிடம் வீழ்ந்தது. இதனால் டோனி டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இந்நிலையில் இன்று மதியத்திற்குப்பின் திடீர் பயணமாக ராஞ்சி மைதானம் வந்து ஆட்டத்தை ரசித்தார்.
ஆட்டம் முடியும் வரை மைதானத்தில் இருந்து போட்டியை பார்த்தார். டோனியை டி.வி. ஸ்கிரீனில் காண்பித்தபோது உள்ளூர் ரசிகர்கள் டோனி... டோனி... என உற்சாக குரல் எழுப்பினார்கள்.
2014-ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
Next Story






