என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரர்களின் தவறான நடவடிக்கைக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 25 ஆயிரம் டாலர் அபராதம்
Byமாலை மலர்18 March 2017 11:54 AM GMT (Updated: 18 March 2017 11:54 AM GMT)
செல்சியாவிற்கு எதிரான போட்டியில் நடுவரிடம் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதால், அந்த அணிக்கு 25 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எஃப்.ஏ. கோப்பைக்கான காலிறுதி போட்டி ஒன்றில் கடந்த திங்கட்கிழமையன்று மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் செல்சியா 1-0 என வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆண்டர் ஹெராராவை நடுவர் மைக்கேல் ஆலிவர் வெளியேற்றினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுவர் ஹெராராவை வெளியேற்றிய போது, மற்ற வீரர்கள் நடுவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வீரர்களை கட்டுபடுத்த முடியாமல் போன மான்செஸ்டர் அணிக்கு, போட்டியின் விதிமுறையை மீறியுள்ளதாக 25 ஆயிரம் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து அசோசியேசன் கூறியிருந்தது. இந்த தொகையை செலுத்த மான்செஸ்டர் அணியும் சம்மதம் தெரிவித்துள்ளது.
கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியின்போது ரசிகர்களோ, வீரர்களோ விதிமுறையை மீறினால் அதற்கு அந்தந்த கால்பந்து கிளப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆண்டர் ஹெராராவை நடுவர் மைக்கேல் ஆலிவர் வெளியேற்றினார். இதனால் அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. நடுவர் ஹெராராவை வெளியேற்றிய போது, மற்ற வீரர்கள் நடுவரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வீரர்களை கட்டுபடுத்த முடியாமல் போன மான்செஸ்டர் அணிக்கு, போட்டியின் விதிமுறையை மீறியுள்ளதாக 25 ஆயிரம் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக கால்பந்து அசோசியேசன் கூறியிருந்தது. இந்த தொகையை செலுத்த மான்செஸ்டர் அணியும் சம்மதம் தெரிவித்துள்ளது.
கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியின்போது ரசிகர்களோ, வீரர்களோ விதிமுறையை மீறினால் அதற்கு அந்தந்த கால்பந்து கிளப்புதான் பொறுப்பேற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X