என் மலர்
செய்திகள்

ஸ்டீவன் சுமித்தின் கால்களுக்கு இடையே சிக்கிய பந்தை சஹா எடுத்து அவுட் கேட்டு அப்பீல் செய்த காட்சி.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் நடந்த சுவாரஸ்யமான துளிகள்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கிய இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் நடந்த சில சுவாரஸ்மான நிகழ்வுகளை பார்க்கலாம்.
ராஞ்சி :
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. முதல் இரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்ற நிலையில் முன்னிலை பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். இந்த போட்டியில் நடந்த சில சுவாரஸ்மான துளிகளை இப்போது பார்க்கலாம்.
* இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய்க்கு இது 50-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 29-வது இந்தியர் விஜய் ஆவார்.
* ராஞ்சியில் டெஸ்ட் கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 26-வது டெஸ்ட் மைதானமாகும். ஒட்டுமொத்த அரங்கில் 113-வது டெஸ்ட் மைதானமாகும்.

* விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அடுத்தடுத்த டெஸ்டுகளில் மாற்றமின்றி அணியை ஒரு போதும் இறக்கியதில்லை. அந்த வினோதம் இந்த டெஸ்டிலும் நீடிக்கிறது. முகுந்துக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.
* ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 97 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ஜடேஜாவின் ஓவரை எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது இரண்டு கால்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. பந்து பேட்டில் உரசியதாக நினைத்த இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா உடனடியாக பந்தை அவரது கால்களுக்கு இடையே இருந்து எடுக்க முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி சுமித் கீழே விழுந்தார். ஆனாலும் விடாப்பிடியாக பந்தை எடுத்த சஹா அவுட் கேட்டு அப்பீல் செய்தார். நடுவர்களே அவரது செயலை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. முதல் இரு டெஸ்டுகளில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்ற நிலையில் முன்னிலை பெறுவது யார்? என்ற எதிர்பார்ப்பை இந்த டெஸ்ட் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித் சதம் அடித்து களத்தில் நிற்கிறார். இந்த போட்டியில் நடந்த சில சுவாரஸ்மான துளிகளை இப்போது பார்க்கலாம்.
* இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய்க்கு இது 50-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 29-வது இந்தியர் விஜய் ஆவார்.
* ராஞ்சியில் டெஸ்ட் கிரிக்கெட் நடப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவின் 26-வது டெஸ்ட் மைதானமாகும். ஒட்டுமொத்த அரங்கில் 113-வது டெஸ்ட் மைதானமாகும்.

* விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு அடுத்தடுத்த டெஸ்டுகளில் மாற்றமின்றி அணியை ஒரு போதும் இறக்கியதில்லை. அந்த வினோதம் இந்த டெஸ்டிலும் நீடிக்கிறது. முகுந்துக்கு பதிலாக முரளிவிஜய் சேர்க்கப்பட்டார்.
* ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 97 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது, ஜடேஜாவின் ஓவரை எதிர்கொண்டார். அப்போது பந்து அவரது இரண்டு கால்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. பந்து பேட்டில் உரசியதாக நினைத்த இந்திய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா உடனடியாக பந்தை அவரது கால்களுக்கு இடையே இருந்து எடுக்க முயற்சித்தார். இதில் நிலை தடுமாறி சுமித் கீழே விழுந்தார். ஆனாலும் விடாப்பிடியாக பந்தை எடுத்த சஹா அவுட் கேட்டு அப்பீல் செய்தார். நடுவர்களே அவரது செயலை பார்த்து வயிறுகுலுங்க சிரித்தனர்.
Next Story






