என் மலர்
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: பிஎஸ்ஜியை 6-1 என துவம்சம் செய்தது பார்சிலோனா
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை 6-1 என துவம்சம் செய்து காலிறுதிக்கு முன்னேறியது பார்சிலோனோ.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஐரோப்பிய சாம்பயின்ஸ் லீக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும் 16 அணிகள், எதிரணியுடன் சொந்த மைதானத்தில் ஒரு முறையும், எதிரணி மைதானத்தில் ஒரு முறையும் என இரண்டு போட்டிகளில் மோத வேண்டும்.
அதன்படி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா, பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் ஜெயின்ட்- ஜெர்மைன் அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைந்தது.
அதன்படி முதல் போட்டி பி.எஸ்.ஜி.க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவை 4-0 என பிஎஸ்ஜி வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பார்சிலோனா மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற்றது. சொந்த மைதானதில் 5-0 என வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா இருந்தது. இது கடினமான ஒன்று என்றாலும் பார்சிலோனா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சுவாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் ஓன்கோல் மூலம் 40-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு ஒரு கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். ஆனால் 62-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடித்தார். ஆகவே பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்து.
காலிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மேலும் 3 கோல்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. சொந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் பார்சிலோனா ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.

88-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நெய்மர் அருமையாக பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் நிறுத்தம், காயம் போன்றவற்றை கணக்கிட்டு 5 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. இதனால் 90 நிமிடத்தில் ஆட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது.

91-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நெய்மர் கோல் அடித்தார். 95-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபர்ட்டோ கோல் அடிக்க பார்சிலோனா 6-1 என அபார வெற்றி பெற்றது.

ஓட்டுமொத்தமாக இரண்டு போட்டிகளிலும் அடிக்கப்பட்ட கோல்கள் கணக்கின்படி பார்சிலோனா 6-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
அதன்படி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா, பிரான்ஸ் நாட்டின் முன்னணி அணியான பாரிஸ் ஜெயின்ட்- ஜெர்மைன் அணிகள் மோதும் வகையில் அட்டவணை அமைந்தது.
அதன்படி முதல் போட்டி பி.எஸ்.ஜி.க்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் பார்சிலோனாவை 4-0 என பிஎஸ்ஜி வீழ்த்தியது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பார்சிலோனா மைதானத்தில் 2-வது போட்டி நடைபெற்றது. சொந்த மைதானதில் 5-0 என வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் பார்சிலோனா இருந்தது. இது கடினமான ஒன்று என்றாலும் பார்சிலோனா அணி தன்னம்பிக்கையுடன் விளையாடியது.
ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் சுவாரஸ் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் ஓன்கோல் மூலம் 40-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு ஒரு கோல் கிடைத்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். ஆனால் 62-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் எடின்சன் கவானி ஒரு கோல் அடித்தார். ஆகவே பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்றிருந்து.
காலிறுதிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் மேலும் 3 கோல்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. சொந்த மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் பார்சிலோனா ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. என்றாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.

88-வது நிமிடத்தில் பார்சிலோனா அணிக்கு ப்ரீஹிக் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நெய்மர் அருமையாக பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் நிறுத்தம், காயம் போன்றவற்றை கணக்கிட்டு 5 நிமிடங்கள் அதிகமாக கொடுக்கப்பட்டது. இதனால் 90 நிமிடத்தில் ஆட்டம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றது.

91-வது நிமிடத்தில் பார்சிலோனாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் நெய்மர் கோல் அடித்தார். 95-வது நிமிடத்தில், அதாவது ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் செர்ஜி ரொபர்ட்டோ கோல் அடிக்க பார்சிலோனா 6-1 என அபார வெற்றி பெற்றது.

ஓட்டுமொத்தமாக இரண்டு போட்டிகளிலும் அடிக்கப்பட்ட கோல்கள் கணக்கின்படி பார்சிலோனா 6-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
Next Story






