என் மலர்
செய்திகள்

காயம் காரணமாக வங்காள தேச தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் இந்திய தொடரில் இருந்து நீக்கம்
தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்காள தேச அணியின் தொடக்க வீரர் இம்ருல் கெய்ஸ் இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கு முன்னோட்டமாக வங்காள தேசம் அணி இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி நாளில் வங்காள தேச அணி பீல்டிங் செய்தபோது அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது,
இதனால் அவர் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கெய்ஸ் விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக முதன்முறையாக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் முதல் இன்னிங்சில் 86 ரன்னும், 2-வது இன்னிங்சில் 36 ரன்னும் எடுத்தார். இதனால் இந்தியாவிற்கு எதிராக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
இந்த போட்டிக்கு முன்னோட்டமாக வங்காள தேசம் அணி இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி நாளில் வங்காள தேச அணி பீல்டிங் செய்தபோது அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் இம்ருல் கெய்ஸின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது,
இதனால் அவர் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் கெய்ஸ் விளையாட வில்லை. அவருக்குப் பதிலாக முதன்முறையாக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்கினார். அவர் முதல் இன்னிங்சில் 86 ரன்னும், 2-வது இன்னிங்சில் 36 ரன்னும் எடுத்தார். இதனால் இந்தியாவிற்கு எதிராக சவுமியா சர்கார் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது.
Next Story






