என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம்: சஹா சொல்கிறார்
Byமாலை மலர்5 Feb 2017 3:24 PM GMT (Updated: 5 Feb 2017 3:24 PM GMT)
வங்காள தேச அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம் என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தியா வங்காள தேசத்தை குறைத்து மதிப்பிடாது என்று சகா கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்களை எளிதான அணியாக நினைக்கலாம் என்று கூறப்படலாம். ஆனால், மைதானத்தில் அவர்களை எதிர்கொள்வதற்கு முன்னாள் குறைத்து மதிப்பிடமாட்டோம். போட்டி நடைபெறும் அந்த நாளின் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. சூழ்நிலையை பொறுத்து நாங்கள் செயல்படுவோம்.
ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். நாம் என்ன நினைக்கிறமோ, அதை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகலாம். இது உங்களது சிந்தனைகளை நல்ல ஆட்டத்திறனாக மாற்றுவதில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி இந்தியா எப்போது வருகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது வங்காள தேச டெஸ்ட் மீதுதான் எனது கவனம் இருக்கிறது. அவர்கள் இந்தியா வந்த பிறகு நாங்கள் அவர்களை பற்றி சிந்திப்போம்’’ என்றார்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பரான சகா, வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து கூறுகையில் ‘‘ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் நாங்கள் அவர்களை எளிதான அணியாக நினைக்கலாம் என்று கூறப்படலாம். ஆனால், மைதானத்தில் அவர்களை எதிர்கொள்வதற்கு முன்னாள் குறைத்து மதிப்பிடமாட்டோம். போட்டி நடைபெறும் அந்த நாளின் சூழ்நிலையை பொறுத்து இருக்கிறது. சூழ்நிலையை பொறுத்து நாங்கள் செயல்படுவோம்.
ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவார்கள். நாம் என்ன நினைக்கிறமோ, அதை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகலாம். இது உங்களது சிந்தனைகளை நல்ல ஆட்டத்திறனாக மாற்றுவதில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி இந்தியா எப்போது வருகிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தற்போது வங்காள தேச டெஸ்ட் மீதுதான் எனது கவனம் இருக்கிறது. அவர்கள் இந்தியா வந்த பிறகு நாங்கள் அவர்களை பற்றி சிந்திப்போம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X