என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வினுடைய கட்டுப்பாடு அவரை வித்தியாசப்படுத்துகிறது: சாஹிப் அல் ஹசன்
    X

    அஸ்வினுடைய கட்டுப்பாடு அவரை வித்தியாசப்படுத்துகிறது: சாஹிப் அல் ஹசன்

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், அவருடைய கட்டுப்பாட்டால் வித்தியாசப்படுகிறார் என சாஹிப் அல் ஹசன் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இவர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய மண்ணில் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 9-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் முக்கிய பங்கு வகிக்க இருக்கிறார்கள்.

    இதேபோல் வங்காள தேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டர் சாஹிப் அல் ஹசன். இவரும் தனது சுழற்பந்து வீச்சால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அஸ்வினுக்கு உங்களுக்கும் இடையில் போட்டி நிலவுகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அஸ்வின் அவருடைய கட்டுப்பாட்டில் தனித்து காணப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

    மேலும் இந்தியாவிற்கு எதிரான போட்டி குறித்து சாஹிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘இந்த போட்டி ஒவ்வொரு வீரர்களுக்கும் சவாலானது. நீங்கள் 250 ரன்கள் அடித்து, பந்து வீச்சாளர் சிறப்பான செயல்பட்டால், 250 ரன்கள் மிகப்பெரிய ஸ்கோராகும். அதேவேளையில் நீங்கள் 500 ரன்களுக்கு மேல் குவித்து, பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அதிக ரன்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் அணி சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    ஒரு துறையை மட்டும் நம்பி ஒரு அணி வெற்றியை சார்ந்திருக்க முடியாது. நியூசிலாந்து தொடரில் இது நடந்தது. ஒருநாள் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். அடுத்த நாள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால், இரு துறைகளிலும் ஒரே நாளில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. புதிய வீரர்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு வீரரரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

    அஸ்வின் உடன் எந்தவொரு போட்டியும் இல்லை. அவருடனான வழியில் நான் உள்ளேனா என்று என்னால் நினைக்க தோன்றவில்லை. அந்த வழியில் எந்தவொரு நினைப்பும் இல்லை. அவருடைய இடத்தில் இருந்து அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னுடைய வழியில் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன். நான் மேலும் சிறந்த முறையில் செயல்பட்டால் அது அணியின் வெற்றிக்கு உதவும். முக்கியமான வீரர்கள் அணிக்கு அணிக்கு மாறுபடுவார்கள். எனக்குன்டான வேலையை அணிக்காக சிறப்பாக செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

    அஸ்வின் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருடைய கட்டுப்பாடு அவரை தனி வீரராக உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் என்ன செய்ய விரும்புகிறாரோ, அதை அவர் செய்கிறார். அவருடைய கட்டுப்பாடு மற்றும் உறுதி அவரை நம்பர் ஒன் வீரராக உருவாக்கியுள்ளது.
    Next Story
    ×