என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா
Byமாலை மலர்4 Feb 2017 3:00 PM GMT (Updated: 4 Feb 2017 3:00 PM GMT)
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் அர்செனலை 3-1 என வீழ்த்தியது செல்சியா.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் செல்சியா, அர்செனல் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கஸ் அலோன்சோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
பின்னர் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியது. சொந்த மைதானத்தில் விளையாடிய செல்சியா ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு செல்சியா அணியின் 2-வது கோலை பதிவு செய்தார். 85-வது நிமிடத்தில் பிரான்கெஸ்க் பெப்ரிகாஸ் மேலும் ஒரு கோல் அடிக்க செல்சியா 3-0 என முன்னிலைப் பெற்றது.
கடைசி நிமிடமான 90-வது நிமிடம் வரை அர்செனல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயத்தின் காரணமாக ஆட்டம் தடைபடுவதை கணக்கிட்டு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில் 91-வது நிமிடத்தில் அர்செனல் அணியின் ஆலிவர் கிராட் ஒரு கோலை பதிவு செய்தார்.
இதனால் செல்சியா 3-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் செல்சியா 24 போட்டியில் 59 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 23 போட்டிகளில் 47 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அர்செனல் 24 போட்டிகளில் 47 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் செல்சியா அணியின் மார்கஸ் அலோன்சோ முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேர ஆட்டத்தில் செல்சியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
பின்னர் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியது. சொந்த மைதானத்தில் விளையாடிய செல்சியா ஆதிக்கம் செலுத்தியது. 53-வது நிமிடத்தில் ஈடன் ஹசார்டு செல்சியா அணியின் 2-வது கோலை பதிவு செய்தார். 85-வது நிமிடத்தில் பிரான்கெஸ்க் பெப்ரிகாஸ் மேலும் ஒரு கோல் அடிக்க செல்சியா 3-0 என முன்னிலைப் பெற்றது.
கடைசி நிமிடமான 90-வது நிமிடம் வரை அர்செனல் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. காயத்தின் காரணமாக ஆட்டம் தடைபடுவதை கணக்கிட்டு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த நேரத்தில் 91-வது நிமிடத்தில் அர்செனல் அணியின் ஆலிவர் கிராட் ஒரு கோலை பதிவு செய்தார்.
இதனால் செல்சியா 3-1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் செல்சியா 24 போட்டியில் 59 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 23 போட்டிகளில் 47 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அர்செனல் 24 போட்டிகளில் 47 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X