என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் கலந்துரையாட விரும்பும் ஜோ ரூட்
Byமாலை மலர்18 Jan 2017 1:06 PM GMT (Updated: 18 Jan 2017 1:06 PM GMT)
சேஸிங்கில் வல்லவரான விராட் கோலியுடன் அமர்ந்து கலந்துரையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் தனது விருப்பத்தை கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 351 ரன்கள் என்ற இமாலய சேஸிங்கை எட்டி வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் இந்தியா 63 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விராட் கோலி 122 ரன்னும், கேதர் ஜாதவ் 120 ரன்னும் சேர்த்தனர். விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27 சதங்கள் அடித்துள்ளார். இதில் 15 சதசங்கள் சேஸிங்கில் அடித்து அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
இந்நிலையில், சேஸிங் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் வெகுவாக பாராட்டியுள்ளார்.
விராட் கோலி சாதனை குறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்வதில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். உண்மையிலேயே இது மிகவும் சிறந்ததாக உள்ளது. சேஸிங்கில் 15 சதங்கள் அடித்துள்ளார் என்பதை அவரது சாதனை வெளிப்படுத்துகிறது.
விராட் கோலியுடன் உட்கார்ந்து கலந்துரையாட விரும்புகிறேன். ஆனால் இதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே அவருடைய ஆட்டத்தை கவனமாக பார்த்தால், அதற்கு பின் ஏராளமான விஷயங்கள் உள்ளன” என்றார்.
இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவிக்க ஜோ ரூட் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 78 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் விராட் கோலியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். விராட் கோலி 122 ரன்னும், கேதர் ஜாதவ் 120 ரன்னும் சேர்த்தனர். விராட் கோலி இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27 சதங்கள் அடித்துள்ளார். இதில் 15 சதசங்கள் சேஸிங்கில் அடித்து அணியை வெற்றிபெற செய்துள்ளார்.
இந்நிலையில், சேஸிங் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடும் விராட் கோலியை இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோ ரூட் வெகுவாக பாராட்டியுள்ளார்.
விராட் கோலி சாதனை குறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்வதில் மிகவும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். உண்மையிலேயே இது மிகவும் சிறந்ததாக உள்ளது. சேஸிங்கில் 15 சதங்கள் அடித்துள்ளார் என்பதை அவரது சாதனை வெளிப்படுத்துகிறது.
விராட் கோலியுடன் உட்கார்ந்து கலந்துரையாட விரும்புகிறேன். ஆனால் இதற்கான வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. உண்மையிலேயே அவருடைய ஆட்டத்தை கவனமாக பார்த்தால், அதற்கு பின் ஏராளமான விஷயங்கள் உள்ளன” என்றார்.
இங்கிலாந்து அணி 350 ரன்கள் குவிக்க ஜோ ரூட் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 78 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X