search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி
    X

    தெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

    வெற்றிகரமான சேசிங்கில் அதிக சதம் அடித்திருந்த கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார்.
    உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிக்கும் வகையில் விராட் கோலி மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் அவர் 105 பந்தில் 122 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

    177-வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய விராட் கோலிக்கு இது 27-வது சதமாகும். அதிகம் சதம் அடித்த வீரர்களில் தெண்டுல்கர் (49 சதம்), பாண்டிங் (30), ஜெயசூர்யா (28) ஆகியோருக்கு அடுத்தப்படியாக அவர் தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார்.

    2-வது இன்னிங்சில் அதாவது ரன் சேசிங்கில் கோலி 17-வது செஞ்சூரியை (96 ஆட்டம்) எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் தெண்டுல்கரை சமன் செய்தார். தெண்டுல்கர் 232 ஆட்டத்தில் 17 சதமும், தில்சான் 116 இன்னிங்சில் 11 சதமும், கிறிஸ்கெய்ல் 139 இன்னிங்சில் 11 சதமும் 2-வதாக விளையாடி எடுத்தனர்.

    வெற்றிகரமாக ரன்னை சேஸ் செய்ததில் அதிகம் சதம் அடித்தவர் என்ற சாதனையை விராட் கோலி பெற்றார். வெற்றிகரமாக ரன் இலக்கை எடுத்ததில் அவரது 15-வது சதமாகும். (63 ஆட்டம்). இதன் மூலம் தெண்டுல்கரை (14 சதம்) அவர் முந்தி இந்த சாதனையை படைத்தார்.

    2-வது இன்னிங்சில் கோலி அடித்த சதத்தில் இரண்டு செஞ்சூரியில் மட்டும் தான் இந்தியா வெற்றி பெறவில்லை.

    தில்சான், ஜெயசூர்யா, சயீத் அன்வர் ஆகியோர் வெற்றிகரமாக ரன்னை சேஸ் செய்ததில் தலா 9 சதம் அடித்து இருந்தனர்.
    Next Story
    ×