என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்
Byமாலை மலர்15 Jan 2017 12:47 PM GMT (Updated: 15 Jan 2017 12:47 PM GMT)
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையி்லான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா 48.2 ஓவரில் 220 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பாபர் ஆசம் 34 ரன்களும், சோயிப் மாலிக் அவுட்டாகாமல் 42 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சோயிப் மாலிக் பந்தை கட் செய்த காட்சி
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 72 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவி புரிந்த மொகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
3-வது போட்டி பெர்த்தில் 19-ந்தேதி நடக்கிறது.
பின்னர் 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியின் கேப்டன் மொகமது ஹபீஸ் தொடக்க வீரராக களம் இறங்கி 72 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த பாபர் ஆசம் 34 ரன்களும், சோயிப் மாலிக் அவுட்டாகாமல் 42 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சோயிப் மாலிக் பந்தை கட் செய்த காட்சி
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. 72 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவி புரிந்த மொகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
3-வது போட்டி பெர்த்தில் 19-ந்தேதி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X