என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவிப்பு
Byமாலை மலர்4 Jan 2017 4:38 AM GMT (Updated: 4 Jan 2017 4:38 AM GMT)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
சிட்னி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மேலும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்து இருந்தது.
தொடக்க வீரர்கள் வார்னர், மேட்ரன்ஷா ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். வார்னர் 113 ரன்னில் ஆடடம் இழந்தார். ரென்ஷா 167 ரன்னிலும், பீட்டர் ஹேன்ட்ஸ்ம் 40 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. அபாரமாக விளையாடி வந்த ரென்ஷா 184 ரன்னில் ஆட்டம் இழந்தார். 293 பந்துகளில் 20 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
பீட்டர்ஹேண்ட்சும் 3-வது வீரராக இந்த டெஸ்டில் சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4-வது டெஸ்டில் விளையாடிய அவருக்கு இது 2-வது சதமாகும். வகாப்ரியாஸ் 3 விக்கெட்டும், இம்ரன்கான், அசார்அலி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை விளையாடியது. 6 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. ஹாசல்வுட் பந்தில் சர்ஜில்கான் (4 ரன்), பாபர் ஆசம் (0) ஆட்டம் இழந்தனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் 2 டெஸ்டிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 39 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மேலும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன் குவித்து இருந்தது.
தொடக்க வீரர்கள் வார்னர், மேட்ரன்ஷா ஆகியோர் சதம் அடித்து இருந்தனர். வார்னர் 113 ரன்னில் ஆடடம் இழந்தார். ரென்ஷா 167 ரன்னிலும், பீட்டர் ஹேன்ட்ஸ்ம் 40 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது. அபாரமாக விளையாடி வந்த ரென்ஷா 184 ரன்னில் ஆட்டம் இழந்தார். 293 பந்துகளில் 20 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
பீட்டர்ஹேண்ட்சும் 3-வது வீரராக இந்த டெஸ்டில் சதம் அடித்தார். அவர் 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 4-வது டெஸ்டில் விளையாடிய அவருக்கு இது 2-வது சதமாகும். வகாப்ரியாஸ் 3 விக்கெட்டும், இம்ரன்கான், அசார்அலி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 538 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் பாகிஸ்தான் முதல் இன்னிங்சை விளையாடியது. 6 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. ஹாசல்வுட் பந்தில் சர்ஜில்கான் (4 ரன்), பாபர் ஆசம் (0) ஆட்டம் இழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X