search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை
    X

    2-வது டெஸ்ட்: ரபாடா, பிளாண்டர் வேகத்தில் 110 ரன்னில் சுருண்டது இலங்கை

    2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணியின் ரபாடா, பிளாண்டர் ஆகியோரின் வேகத்தில் இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா அணி டீன் எல்கர் (129), டி காக் (101) ஆகியோரின் அபார சதத்தால் 392 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பில் குமாரா 6 விக்கெட்டுக்கள் குவித்தார்.

    அதன்பின் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு, இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள்.


    விக்கெட் வீழ்த்திய சந்தோஷத்தில் ரபாடா

    இதனால் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய கருணாரத்னே 24 ரன்னும், 7-வது வீரராக களம் இறங்கிய உபுல் தரங்கா அவுட்டாகாமல் 26 ரன்னும் எடுத்தனர். மற்றவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இலங்கை அணி 110 ரன்னில் சுருண்டது.

    பிளாண்டர், ரபாடா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இலங்கை அணி 282 ரன்கள் பின்தங்கியதால் பாலோ-ஆன் ஆனது. ஆனால் தென்ஆப்பிரிக்கா அணி பாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
    Next Story
    ×