என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்
Byமாலை மலர்27 Dec 2016 7:01 AM GMT (Updated: 27 Dec 2016 7:01 AM GMT)
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.
அசார் அலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 218 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.
56-வது டெஸ்டில் விளையாடும் அசார்அலிக்கு இது 12-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2-வது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளை வரை மழை பாதிப்பு இருந்தது.
அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது. அசார்அலி 112 ரன்னும், ஆசாத்சபீக் 48 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது.
அசார் அலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 218 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.
56-வது டெஸ்டில் விளையாடும் அசார்அலிக்கு இது 12-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2-வது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளை வரை மழை பாதிப்பு இருந்தது.
அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது. அசார்அலி 112 ரன்னும், ஆசாத்சபீக் 48 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X