search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்: வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள்
    X

    ஐ.பி.எல்: வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள்

    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.
    10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல், மே மாதத்தில் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. அடுத்த சீசனுக்கான வீரர்களை அணிகளுக்குள் மாற்றி கொள்ள வருகிற 15-ந் தேதி கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் 8 அணிகளும் பல வீரர்களை தக்க வைத்து இருக்கிறது. தேவையற்ற வீரர்களை விடுவித்து இருக்கிறது. டோனி தலைமையிலான புனே அணி 16 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து) உள்பட 11 வீரர்களை விடுவித்து இருக்கிறது. குஜராத் அணி 16 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு 6 வீரர்களை விடுவித்து இருக்கிறது. பஞ்சாப் 19 வீரர்களை தக்கவைத்ததுடன் 4 வீரர்களை விடுவித்துள்ளது.

    கொல்கத்தா அணி 14 வீரர்களை தக்கவைத்து கொண்டுள்ளது. 9 வீரர்களை விடுவித்து இருக்கிறது. மும்பை அணி 20 வீரர்களை தக்கவைத்து விட்டு 8 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி அணி 18 வீரர்களை தக்கவைத்து கொண்டு 7 வீரர்களையும், பெங்களூரு அணி 20 வீரர்களை தக்க வைத்து கொண்டு 10 வீரர்களையும், ஐதராபாத் அணி 17 வீரர்களை தக்க வைத்து கொண்டு 6 வீரர்களையும் விடுவித்து இருக்கின்றன.
    Next Story
    ×