என் மலர்
செய்திகள்

சென்னை டெஸ்ட்: இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் மொயீன் அலி 146 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் (88), டவ்சன் (66 அவுட் இல்லை), ரஷித் (60) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் பார்தீவ் பட்டேல் லோகேஷ் ராகுல் உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
அந்த அணியின் மொயீன் அலி 146 ரன்கள் குவித்தார். ஜோ ரூட் (88), டவ்சன் (66 அவுட் இல்லை), ரஷித் (60) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டுக்களும், உமேஷ் யாதவ் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முரளி விஜய்க்கு காயம் ஏற்பட்டதால் பார்தீவ் பட்டேல் லோகேஷ் ராகுல் உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 30 ரன்னுடனும், பார்தீவ் பட்டேல் 28 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story






