என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
180 ஓவரில் 420 ரன், கைவசம் 8 விக்கெட் - சாதிக்குமா பாகிஸ்தான்?
Byமாலை மலர்17 Dec 2016 11:17 AM GMT (Updated: 17 Dec 2016 11:17 AM GMT)
பிரிஸ்பேன் பகல் - இரவு (பிங்க் பந்து) டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 490 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்- இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31 ரன்னுடனும், மொகமது ஆமிர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. சர்பிராஸ் அகமது அரைசதம் அடித்தார். முகமது அமீர் 21 ரன்னிலும், ரஹத் அலி 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் 55 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்- அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. சர்பிராஸ் அகமது 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் 287 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 39 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கும்போது டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
சுமார் இரண்டேகால் நாட்கள் இருந்தாலும் பாகிஸ்தான் அவ்வளவு நேரம் நிலைத்து நின்று விளையாடுவது சாத்தியம் இல்லை. இந்த கடுமையான இலக்கை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, சமி அஸ்லாம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருக்கும்போது சிம அஸ்லாம் 15 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆசம் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 41 ரன்னுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. சுமார் 180 ஓவருக்கு மேல் ஆஸ்திரேலியா வீச வேண்டும். 180 ஓவரில் 420 ரன்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் நிலையாக நிற்க வேண்டும்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (பகல்- இரவு) போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 97 ரன் எடுத்தது. சர்பிராஸ் அகமது (31 ரன்னுடனும், மொகமது ஆமிர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-ம் நாள் ஆட்டம் நடந்தது. சர்பிராஸ் அகமது அரைசதம் அடித்தார். முகமது அமீர் 21 ரன்னிலும், ரஹத் அலி 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் 55 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்- அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. சர்பிராஸ் அகமது 59 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ஆனால் பாலோ-ஆன் கொடுக்காமல் 287 ரன் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 2-வது இன்னிங்சில் 39 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்திருக்கும்போது டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
சுமார் இரண்டேகால் நாட்கள் இருந்தாலும் பாகிஸ்தான் அவ்வளவு நேரம் நிலைத்து நின்று விளையாடுவது சாத்தியம் இல்லை. இந்த கடுமையான இலக்கை எதிர்நோக்கி பாகிஸ்தான் அணியின் அசார் அலி, சமி அஸ்லாம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருக்கும்போது சிம அஸ்லாம் 15 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த பாபர் ஆசம் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு அசார் அலியுடன் அனுபவ வீரர் யூனிஸ்கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட்டுக்கள் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 41 ரன்னுடனும், யூனிஸ்கான் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தற்போது பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 420 ரன்கள் தேவை கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. இரண்டு நாட்கள் மீதம் உள்ளன. சுமார் 180 ஓவருக்கு மேல் ஆஸ்திரேலியா வீச வேண்டும். 180 ஓவரில் 420 ரன்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் நங்கூரம் பாய்ச்சி நிற்கும் கப்பலை போல் நிலையாக நிற்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X