என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
Byமாலை மலர்15 Dec 2016 7:35 AM GMT (Updated: 15 Dec 2016 7:36 AM GMT)
பிரிஸ்பேனில் தொடங்கியுள்ள பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.
பிரிஸ்பேன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இப்போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ரென்சா களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.
அணியின் ஸ்கோர் 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது துவக்க ஜோடியை பிரித்தார் முகமது ஆமிர். 24-வது ஓவரில் இவர் வீசிய பந்தில் வார்னர் எல்.பி.டபுள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 70 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 32 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து ரென்சாவுடன் இணைந்த கவாஜா 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அதன்பின்னர் ரென்சா-கேப்டன் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரென்சா முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஸ்மித் வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய ரென்சா, 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்மித்தும் அரை சதம் கடந்தார். இதனால், 57 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (53), ஹேண்ட்ஸ்காம்ப் (15) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் சிறப்பாக பந்துவீசி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் கலங்கடித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. இப்போட்டி பகல்-இரவு டெஸ்டாக நடத்தப்படுகிறது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ரென்சா களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது.
அணியின் ஸ்கோர் 70 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது துவக்க ஜோடியை பிரித்தார் முகமது ஆமிர். 24-வது ஓவரில் இவர் வீசிய பந்தில் வார்னர் எல்.பி.டபுள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 70 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 32 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து ரென்சாவுடன் இணைந்த கவாஜா 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
அதன்பின்னர் ரென்சா-கேப்டன் ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரென்சா முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவருக்கு ஸ்மித் வாழ்த்து தெரிவித்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய ரென்சா, 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் ஸ்மித்தும் அரை சதம் கடந்தார். இதனால், 57 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (53), ஹேண்ட்ஸ்காம்ப் (15) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் சிறப்பாக பந்துவீசி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ரன் எடுக்க விடாமல் கலங்கடித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X