search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை
    X

    ஐ.பி.எல்.-2017: கே.கே.ஆர். அணியில் வாசிம் அக்ரம் இடம்பெறவில்லை

    2017-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வாசிம் அக்ரம் இடம்பெறமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. இந்த ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பங்கேற்று வருகிறது.

    9 வருடங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில் 10-வது தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான வாசிம் அக்ரம் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த அணியின் மானேஜிங் டைரக்டர் மற்றும் சிஇஓ வெங்கி மைசூர் இதுகுறித்து கூறுகையில் ‘‘கொல்கத்தா நைட்ரைடர்ஸ் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வாசிம் அக்ரமை அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நாங்கள் இழக்கிறோம். எங்கள் அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டு சாம்பியன் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சொந்த வேலைக் காரணமாக தன்னால் பங்கேற்க இயலாது என்று வாசிம் அக்ரம் கூறியதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×